கடந்த 13ம் திகதி குறித்த திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்த போதிலும் மணமகனின் வருகை இன்மையால் இந்த திருமணம் நடைபெறவில்லை. பெண் வீட்டார் திருமணத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் மணமகனின் வருகைக்காக காத்திருந்தும் அவர் வரவே இல்லை.
இது தொடர்பில் விசாரித்த மணமகளின் உறவினர்களுக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதாவது திருமண நாளன்று மணமகன் அளவுக்கதிகமாக மது அருந்தியத்துடன் சுயநினைவை இழந்து தூங்கியுள்ளார்.
இதன் பின்னர் அடுத்த நாள் போதை தெளிந்து மணப்பெண் வீட்டினரை பார்க்க வந்த மணமகனை தன்னால் திருமணம் செய்ய முடியாது என கூறிய மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் திருமண ஏற்பாட்டிற்கு மணமகள் தரப்பில் செய்த செலவுகளையும் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் காவல்துறையினரின் தலையீட்டினால் இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. தனது திருமணத்திற்கே செல்லாத மணமகன் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக பலவாறான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.