இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும், இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
எல்.ஐ.சி என பெயரிடப்பட்டு உள்ள குறித்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில் நடிகை நயன்தாராவும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். அத்தோடு அனிருத் இசையமைக்க உள்ள இத்திரைப்படத்தை ரூ.45 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.