தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து சர்வம் தாளமயம், தீதும் நன்றும், வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் 2020 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "சூரரைப்போற்று" எனும் திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அபர்ணா பாலமுரளி தொடர்ச்சியாக தமிழில் சிறப்பான தோற்றங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.கடந்த ஆண்டு வெளியான 'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் ரஜினிகாந்துடன் விமானத்தில் செல்லும் புகைப்படத்தை தன்னுடைய Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.