Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
24
பாரம்பரிய சுவையில், சுவையான சுசியம்...!

Sooriyan Gossip - பாரம்பரிய சுவையில், சுவையான சுசியம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
பண்டிகை காலங்களில் நமது வீட்டில் பாரம்பரிய முறைப்படி சில இனிப்பு உணவுகள் மற்றும் காரசாரமான பலகாரங்களை செய்வதுண்டு.


ஆனால் தற்சமயம் நம் பாரம்பரிய பலகாரங்களில் இருந்து சில பலகாரங்கள் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. அப்படி நாம் தொலைத்து வரும் ஒரு பலகாரம் தான் சுசியம்.

ஆகையால் நீங்களும் பண்டிகைக்கு இந்த சுவைமிகுந்த சுசியத்தை செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். இன்று இந்த சுசியம் எப்படி செய்வது, என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் - வெல்லம் - 3/4 கப் துருவிய தேங்காய் - 1/4 கப் சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி மைதா மாவு - 3/4 கப் தண்ணீர் - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை: கடலைப் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு சூடான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் பொடி செய்த வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு, வெல்லம் உருகி கரையும் வரை கிளறவும்.

வெல்லம் நன்கு உருகி சிறிது பாகு பதம் வந்தவுடன், அதனுடன் வேக வைத்த கடலைப் பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

வெல்லப்பாகில் கடலைப் பருப்பு மற்றும் தேங்காய் துருவல் நன்கு கலந்து வரும்வரை வேகவிடவும்.

பின் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும், பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும்.

சுசியம் செய்வதற்கு தேவையான பூரணம் தயார். மைதா மாவில் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து ஊற்றும் பதத்தில் மாவைக் கலந்து கொள்ளவும்.

பூரணம் ஆறிய பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும். பின்பு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயவைக்கவும்.

பூரண உருண்டைகளை மைதா மா கலவையில் இட்டு, நன்கு மூடும் வரை பிரட்டிய பின், சூடான எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.

இபோது சுவை மிகுந்த சுசியம் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment





Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top