இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இம்மாதம் 17 ஆம் திகதி வெளியான திரைப்படம் "கண்ணை நம்பாதே".இப்படத்தின் நாயகியாக ஆத்மிகா நடித்திருந்தார்.
மேலும் இத்திரைப்படத்தில் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.ஒரு த்ரில்லர் கதையாக உருவாகி இருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
இந்த நிலையில்,நடிகை ஆத்மிகா "கண்ணை நம்பாதே" திரைப்படத்தை தன்னுடைய தாத்தாவுடன் இணைத்து பார்த்துள்ளார்.இந்த விடயத்தினை தன்னுடைய Twitter பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.