டெல்லியில் நடைபெறும் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 4 இந்திய வீராங்கனைகள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 48,50,75 மற்றும் 81 கிலோ பிரிவுகளில் இந்த வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த இந்திய வீராங்கனைகள் 4 பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியா 4 வெள்ளி பதக்கங்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இதேவேளை இந்த வீராங்கனைகள் அனைவரும் வெற்றி பெற்றால் இந்தியாவின் மகளிர் குத்துச்சண்டைப் போட்டி வரலாற்றில் பாரிய மைல்கல்லாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.