Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
உங்கள் அழகை அதிகரிக்கும் 'பீட்ரூட்'

SooriyanFM Gossip - உங்கள் அழகை அதிகரிக்கும் 'பீட்ரூட்'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

482 Views
சருமப் பொலிவையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று தான் பீட்ரூட். இதில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன.
ஒவ்வொருவரும் நம் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். எனவே பீட்ரூட்டைக் கொண்டு கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை எளிதில் குணப்படுத்த முடியும்.

1.இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து பூசினால் தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

2 .இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு தேக்கரண்டி பீட்ரூட் சாறுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.

3. ஒரு தேக்கரண்டி பீட்ரூட் சாறுடன், சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும். பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும்.

4 .இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.

5 .கடலை மா, பீட்ரூட் சாறு, தயிர் இவை மூன்றும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு ரோஜா இதழ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும்.

6.முல்தானி மெட்டி பொடியுடன், சிறிதளவு பீட்ரூட் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றித் தடவினால் கருவளையம் மறையும். பீட்ரூட், கரட், ஆப்பிள் மூன்றையும் சேர்த்து அரைத்து சிறிது கடலை மா கலந்து முகத்தில் பேஸ்பேக் போடவும்.

இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட் சாறுடன் அரிசி மா 2 தேக்கரண்டி , தேன் 1 தேக்கரண்டி கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கும்.

பீட்ரூட் துருவலுடன், வாழைப்பழம் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கி பொலிவாகும். அரைத்த பீட்ரூட் விழுதுடன், ஓட்ஸ் கலந்து முகத்தில் பூசி ஸ்கிரப் செய்து வந்தால் சருமத்தில் உண்டான கருமை நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top