இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 28 திகதி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் 800 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிட்டனர்.இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான போது முதல் நாளில், 20 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் செய்திருந்த இத்திரைப்படம் தற்போது இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை 'பொன்னியின் செல்வன்-2' வசூல் முதல் பாகத்தை விடவும் குறைவாக உள்ளதாக Box Office வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.