சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராவல்பிண்டி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியின் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 336 ஓட்டங்களை குவித்தது.
டேரில் மிட்செல் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆரம்ப வீரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
தலைவர் டொம் லதம் 98 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவுப் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 337 ஓட்டங்களை இலக்காக கொண்டு பாகிஸ்தான் களமிறங்கியது. பாகிஸ்தானின் ஆரம்ப ஆட்டக்காரர் பகார் சமான் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களை குவித்தார்.
பாபர் அசாம் 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பகார் சமானுக்கு அளிக்கப்பட்டது. இரண்டு அணிகளுக்குமிடையிலான அடுத்த போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.