பூமியில் யார் வல்லரசு என்கிற போட்டி நிலவுவதுபோல , விண்வெளியிலும் யார் வல்லரசு என்ற போட்டி நீண்ட காலமாக நிலவிவருகிறது.
இந்நிலையில் சீனாவின் ஜுராங் ரோவர் கடந்த 2021ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சீனாவின் இந்த வெற்றி பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான புதிய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் கண்டறிந்துள்ளது.
செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்தபோது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.
உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கில், நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கா, இரும்பு
ஒக்சைட் தாதுக்கள் மற்றும் குளோரைட் டுகளால் நிறைந்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற காலநிலை இருந்ததாகவும், சுமார் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதன் மேற்பரப்பில் கடல் பாய்ந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் நீண்ட காலமாக நம்புவதாக சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் பரிணாம வரலாற்றை புரிந்துகொள்வதில் சமீபத்திய இந்த ஆராய்ச்சி திருப்புமுனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் கொண்ட சில பகுதிகள் இருப்பதை இந்த புதிய கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.
விண்வெளி ஆராய்ச்சிகளில் இது ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா,சீனா , ஜப்பான் , ரஷ்யா,இந்திய உள்ளிட்ட பல நாடுகள் செவ்வாய் கிரகத்தை இலக்கு வைத்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றன.