பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி 500 கோடி ரூபாவிற்கு மேல் வசூலை குவித்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாவிற்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் BTS காணொளியை நடிகை த்ரிஷா அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி தற்போது இரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.