'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது போல், உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என கேரள மாநில முஸ்லீம் யூத் லீக் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.இத்திரைப்படத்தில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் டிரைலரில் கேரளாவைச் சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த பெண்களை ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் என்கிற பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதை மையமாக வைத்து எடுத்துள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு இது ஒரு உண்மை கதை என்றும் குறித்த ட்ரைலரில் குறிப்பிட்டுள்ளமையினால் கேரளா முஸ்லீம் யூத் லீக் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மை என யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.