பிரேசிலின் அரகாரியா நகரின் 65 வயதான மேயர் ஒருவர் தன்னை விட 49 வயது குறைந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் பின்னர் குறித்த சிறுமியின் தாயாருக்கு உயர் பதவியும் அதிக சம்பளமும் வழங்கப்பட்டது.
பிரேசில் நாட்டின் சட்டத்தின் கீழ் 16 வயது நிரம்பிய சிறுமிகள் திருமணம் செய்ய வேண்டுமாக இருந்தால் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடியும்.
சிறுமியின் தாயார் கல்வி அமைச்சில் கடைநிலை ஊழியராக வேலையைச் செய்து கொண்டிருந்த நிலையில் அவரது மகள் மேயருடன் திருமணம் செய்துகொண்டதன் பின்னர் அவருக்கு உயர் பதவியும் அதிக சம்பளமும் வழங்கப்பட்டதுடன் இந்த திருமணம் அந்நகரத்தின் துணை மேயர் மற்றும் சிவில் பதிவேட்டின் தலைவரால் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் தாயாருக்கு 26 வருட அனுபவத்தின் காரணமாகவே பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதாக மேயர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாய் மாறியுள்ளது.