Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
4 கோடி ரூபாய் பெறுமதியான வாழைப்பழம் - மாணவன் செய்த அலட்சியமான செயல் !

SooriyanFM Gossip - 4 கோடி ரூபாய் பெறுமதியான வாழைப்பழம் - மாணவன் செய்த அலட்சியமான செயல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

509 Views
அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான வாழைப்பழம் ஒன்றை மாணவன் ஒருவர் பசியின் காரணமாக உட்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தென்கொரியாவின் சியோலில் அமைந்துள்ள லீயும் மியூசியம் ஒஃப் ஆர்ட் என்ற அருங்காட்சியகத்தில் வாழைப்பழத்தினை பயன்படுத்தி செய்யப்பட்ட அருங்கலைப் பொருள் ஒன்று காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரபல பத்திரிகையான நியூயார்க் போஸ்ட் மூலம் கிடைத்த தகவலின்படி, இந்த பிரபலமான கலைப்பொருள் இத்தாலிய ஓவியர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு “Comedian” என பெயர் சூட்டப்பட்டு, மக்களின் பார்வைக்காக குறித்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதில் வினோதமான சம்பவம் என்னவெனில் அந்த மாணவன் வாழைப்பழத்தை உட்கொண்ட பின்னர், அதன் தோலை மீண்டும் சுவரில் ஒட்டி வைத்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் அவரது சகநண்பர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அந்த அருங்காட்சியகத்தின் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டபோது, தான் காலையுணவை உட்கொள்ளாத காரணத்தால் தனக்கு மிகவும் பசித்ததாகவும், அதன் காரணமாகவே வாழைப்பழத்தை உட்கொண்டதாகவும் கூறிய அந்த மாணவன், ஒரு கலைப்பொருளை சேதப்படுத்தி அதனை மாற்றி அமைப்பதும் ஒரு கலை தான் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதன் உரிமையாளரான ஓவியர் எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. என்பதுடன் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் அருங்காட்சியகத்தில் வாழைப்பழம் மாற்றப்படும் என்பதால் இது குறித்து கவலைப்பட ஒன்றும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top