தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.
கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியான வாத்தி திரைப்படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது தொடர்பாக தனுஷும் நெல்சனும் சந்தித்து பேசியதாக கூறப்படுகின்றது. விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.