அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘பருத்திவீரன்’ படத்தில் ‘பிணம் தின்னி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.
‘கிழக்குச் சீமையிலே’, ‘மைனா’, ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர்,
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,செவ்வாழை ராசுவின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.