குழந்தைகளுக்கு சத்தான பானங்களை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். அந்த வகையில் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் - வாழைப்பழம் - 2, பேரீச்சம் பழம் - 10, பாதாம் - 20, பிஸ்தா - சிறிதளவு, பால் - 1/2 லீட்டர், சீனி - 2 தேக்கரண்டி, வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி , (விரும்பினால்) ஐஸ் கட்டிகள், குங்குமப்பூ - அலங்கரிக்க
செய்முறை - முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் பேரீச்சம் பழத்தை விதை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பாதாமை ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்னர் பிஸ்தா, 8 பாதாம் போன்றவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் வெட்டிய வாழைப்பழம், பேரீச்சம் பழம், பாதாம் - 12, சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதை ஒரு கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி அலங்கரித்து பரிமாறினால் புத்துணர்ச்சி தரக்கூடிய பனானா பேரீச்சம் பழ மில்க் ஷேக் தயார்.