இயக்குநர் பா.ரஞ்சித் 2012 ஆம் ஆண்டு வெளியான 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்பு இத்திரைப்படத்தை தொடர்ந்து 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை', 'நட்சத்திரம் நகர்கிறது' என பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் பா. ரஞ்சித்.
அதேவேளை இவரது இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே 'தங்கலான்' திரைப்படத்தை முடித்ததும் இயக்குநர் ரஞ்சித் 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு அடுத்து உலக நாயகன் கமல்ஹாசனுக்காக ஒரு கதையை பா.ரஞ்சித் தயார் செய்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.