தொடர்ந்து "காதல் கொண்டேன்", "7ஜி ரெயின்போ காலனி", "புதுப்பேட்டை", "ஆயிரத்தில் ஒருவன்", "மயக்கம் என்ன", "இரண்டாம் உலகம்", "என்ஜிகே", "நெஞ்சம் மறப்பதில்லை", "நானே வருவேன்" உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது "ஜி ரெயின்போ காலனி" திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கி வரும் செல்வராகவன்,இடைக்கிடையே தனது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு,பலரின் கவனத்தினை ஈர்த்து வருகிறார்.
அந்தவகையில் , "அவர் சொல்கிறார் என கொஞ்சம் , இவர் சொல்கிறார் என கொஞ்சம் என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டே போனால் இறுதியில் மண்டை ஓடு கூட மிஞ்சாது.கல்லறையில் பொறிக்கும் எழுத்துகளில் கூட நீ நீயாகத்தான் இருக்க வேண்டும்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த டுவிட்டர் பதிவு இன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.