Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
காரா பூந்தி செய்வது எப்படி ...?

Sooriyan Gossip - காரா பூந்தி செய்வது எப்படி ...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

573 Views
எல்லோரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று தான் காரா பூந்தி.
 இதனை மிகவும் சரியான முறையில் தயார் செய்ய ஒருசில வழிமுறைகளைக் கையாண்டாலே போதுமானது.

குறிப்பாக கடையில் வாங்கி சாப்பிடுவதை காட்டிலும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் அதில் கிடைக்கும் ருசியே தனிதான். இப்போது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் - கடலை மா – 1 கப் அரிசி மா – ‍ 1/4 கப் மஞ்சள் பொடி – 2 தேக்கரண்டி பெருங்காயப் பொடி – 3 சிட்டிகை மிளகாய் வற்றல் பொடி – 3 தேக்கரண்டி தண்ணீர் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு மிளகு பொடி – 1 தேக்கரண்டி சோடா உப்பு – 3/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்) கடலை எண்ணெய் – காரா பூந்தி பொரிக்கத் தேவையான அளவு கறிவேப்பிலை – 5 கீற்று

செய்முறை முதலில் கடலை மா, அரிசி மா ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி, சோடா உப்பு, பெருங்காயப் பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

பின்னர் மா மற்றும் பொடி வகைகளை ஒருசேரக் கலக்கவும். பின்னர் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமலும், அடிப்பரப்பின் ஓரங்களில் மா இல்லாமலும் ஒருசேர நன்கு கிளறி, தோசை மா பதத்திற்கும் சற்று சீராக கரைத்துக் கொள்ளவும்.

மா விழுந்து பூந்தியாக மாறும் அளவினைப் பொறுத்து தண்ணீரையோ அல்லது மாவினையோ சேர்த்துக் கொள்ளவும். பின்பு கறிவேப்பிலையை அலசி தண்ணீர் இல்லாமல் வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். கரைத்து வைத்துள்ள மாவில் ஒருதுளியை எடுத்து எண்ணெயில் விடும்போது, மா உடனே மேலெழும்பி வந்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்பது பொருள்.

இப்பொழுது பூந்திக் கரண்டியை எண்ணெயின் மேற்பரப்பிற்கு சுமார் 10 செமீ உயரத்திற்கு மேல் வைத்து, ஒரு கரண்டி மாவினை மட்டும் எடுத்து ஊற்றவும்.

மா உருண்டை பூந்திகளாக எண்ணெயில் விழும். எண்ணெயில் இருக்கும் பூந்திகளை அவ்வப்போது கரண்டியால் கிளறி விடவும். பூந்தியின் மேற்பரப்பில் எண்ணெய் குமிழி அடங்கியதும் பூந்திகளை வெளியே எடுத்து விடவும். இவ்வாறாக எல்லா மாவினையும் பூந்திகளாக பொரித்து எடுக்கவும்.

பின்பு கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த கறிவேப்பிலையை காரா பூந்தியின் மேல் கொட்டவும். மிளகுப் பொடியை காரா பூந்தியின் மேல் தூவி நன்கு ஒரு சேர கலந்து விடவும். இப்போது சுவையான காரா பூந்தி தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top