Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
திப்பு சுல்தானின் வாள் ரூ.400 கோடிக்கு ஏலம்

SOORIYANFM GOSSIP - திப்பு சுல்தானின் வாள் ரூ.400 கோடிக்கு ஏலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

524 Views
இந்தியாவின் மன்னர் திப்பு சுல்தான் பயன்படுத்திய பல ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திப்பு சுல்தானின் வாள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள திப்பு சுல்தானின் அரண்மனையின் தனிப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

போர்களில் அவர் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் தற்போது ஏலத்தில் விடப்பட்டது.

போர்களில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் இந்த வாள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏலத்தில் விடப்பட்டது.

இலண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் ஒன்று திப்பு சுல்தானின் வாள் விற்பனைக்கான ஏலத்தை பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது.

ஏலத்தின்போது இரண்டு ஏலத்தாரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிகழ்ந்ததாகவும், இறுதியில் ஒருவர் வென்றதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இறுதியில் எதிர்பார்த்ததைவிட ஏழு மடங்கு அதிகமாக சுமார் ரூ.400 கோடிக்கு வாள் ஏலம் போனது. இது குறித்து ஏல நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஒயிட் கூறுகையில், திப்பு சுல்தானின் அனைத்து ஆயுதங்களிலும் இந்த வாள் சிறப்பு வாய்ந்தது.

திப்பு சுல்தானுடன் நெருங்கிய தனிப்பட்ட தொடர்பை கொண்டுள்ளது. அதன் பழமை மற்றும் சிறந்த கைவினைத்திறன் வாளை தனித்துவமாகவும் அனைவரும் விரும்பத்தக்கதாகவும் மாற்றியுள்ளது என்றார்.

கடந்த 1799 ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி அன்று நான்காவது ஆங்கிலோ, மைசூர் போரில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இதன்பிறகு, துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரது வாள் பிரிட்டிஷ் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்ட குறிப்பிட்ட வாள் இன்று ஏலத்தில் விடப்பட்டுள்ளது . அதேநேரம் ஏலம் எடுத்தவர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட வில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top