Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
உங்கள் சருமம் வெயில் காலத்திலும் வெண்மையாக இதை செய்யுங்கள்....!

Sooriyan Gossip - உங்கள் சருமம் வெயில் காலத்திலும் வெண்மையாக இதை செய்யுங்கள்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,068 Views
அனைத்து பெண்களுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 
ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றி தெரியாது. பொதுவாகவே வெயிலில் வாகனம் செலுத்தி செல்லும் பெண்கள், நடந்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முகம், கழுத்து மற்றும் கைப்பகுதிகளின் தோல்கள் கருத்துப் போய்விடும்.

இதற்க்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம்.

பெண்கள் தங்களது முகத்தை என்ன தான் பேணி பாதுகாத்தாலும், கூட சில வகையான பிரச்சனைகள் அவர்களது முகத்தை வந்து தாக்க தான் செய்கிறது.

அந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் நிச்சயமாக இயற்கை முறையில் தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. அழகை பேணிக்காப்பதில் கடலை மா முக்கிய பங்கு வகிக்கிறது.

அதோடு கருத்த தோல் பகுதிகள் மீண்டும் அதன் இயல்பான நிறத்தை பெற கடலை மா உதவுகிறது. இன்று கடலை மாவை வைத்து நம் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

ஒரு தேக்கரண்டி கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக பூசி , உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும்.

அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும்.

மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும். உருளைகிழங்கு சாறுடன் கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

இதேவேளை வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். இதனை நீக்க தேங்காய் பால் 1 தேக்கரண்டி , கடலை மா ஒரு தேக்கரண்டி எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top