‘அறிந்தும் அறியாமலும்’, ‘சர்வம்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’, போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தன் தற்போது சல்மான் கானை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பான் இந்தியா முறையில் உருவாகும் இந்த திரைப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் சல்மான் கான் இராணுவ அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு விஷ்ணுவர்தன் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.