இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது திரைப்படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற திரைப்படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில்,கமல்ஹாசனின் 233-வது திரைப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி,கமல்ஹாசனின் 233-வது திரைப்படம் இராணுவ பின்னணியில் உருவாகவுள்ளதாகவும் அதில் கமல்ஹாசன் முன்னாள் இராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் வரும் ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கும் நிலையில்,இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.