Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
இலகுவாக செய்திடலாம் நாவிற்கு சுவையான மோதக கொழுக்கட்டை!

Sooriyan Gossip - இலகுவாக செய்திடலாம் நாவிற்கு சுவையான மோதக கொழுக்கட்டை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
விதவிதமான உணவு என்றால் யாருக்குத்தான் சாப்பிடப்பிடிக்காது? அறுசுவை உணவுகளில் இனிப்பு சுவை நிறைந்த உணவுகளை அனைவரும் விரும்பி உண்பார்கள்.பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோதக கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவார்கள்.


வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுவையான, மோதகக் கொழுக்கட்டையை எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 200 கிராம்,
புழுங்கல் அரிசி – 200 கிராம்,
வெல்லம் – 100 கிராம்,
ஏலக்காய் – 3
தேங்காய் – ½ மூடி,
உப்பு – ¼ டீஸ்பூன்.

முதலில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு ஒரு உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடங்கள் கழிந்ததும் அரிசியை எடுத்து மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தெடுக்கவும்.

மாவானது ஈரப்பதம் நீங்கி உலர்ந்தவுடன் வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். பின்னர் வறுத்த மாவினை அரித்துக் கொள்ளுங்கள் .

பின்னர் தேங்காயை துருவி, வெல்லம் மற்றும் பாசிப்பயிற்றை வேகவைத்து ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவல், வெல்லம், பாசிப்பயிறு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒன்றுசேர நன்கு
கிளறிக்க கொள்ள வேண்டும். இப்போது பூரணக் கலவை தயார்.

அடுத்தபடியாக கொழுக்கட்டை மாவில் உப்பினைக் கலந்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி, மாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு திரட்ட வேண்டும்.

எலுமிச்சை அளவு மாவினை எடுத்து உருட்டி கிண்ண வடிவில் செய்யவும்.

அதில் சிறிதளவு பூரணக் கலவையை இட்டு மூடி உருண்டையாக திரட்டவும். அப்படி இல்லையென்றால் கொழுக்கட்டை அச்சில் மாவினை வைத்து எடுக்கவும்.

கொழுக்கட்டைகளை செய்யும்போது கலவை வெளியே வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும்.

இவ்வாறாக எல்லா மாவினையும் கொழுக்கட்டைகளாக தயார் செய்யவும். பின்னர் குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சூடானவுடன் அதில் கொழுகட்டைகளை போட்டு ஆவி வர நன்கு வேக வைக்க வேண்டும்.

மிக குறைந்த விலையில் நாவிற்கு சுவையான ,மற்றும் எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மோதகக் கொழுக்கட்டை தயார்.

நீங்களும் வீட்டில் இருந்தபடியே சுவையான மோதக கொழுக்கட்டையை தயார்செய்து குடும்பத்துடன் சேர்ந்து உண்டு மகிழலாம் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top