Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நெல்லிக்கனி பழச்சாறு !

Sooriyan Gossip - ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நெல்லிக்கனி பழச்சாறு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

323 Views
பழச்சாறு  என்றாலே எல்லோரும் விரும்பி பருகக்கூடியதொன்றாகும் . ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சினைகளை குணப்படுத்தும் ஒரு முக்கிய மூலிகையாக நெல்லிக்கனி  பழச்சாறு  உள்ளது.  இந்த பழச்சாறு  சருமத்திற்கு  மட்டுமல்லாமல்  கூந்தலுக்கும் நல்ல ஒரு பலனை தரக்கூடியதும், அதேபோல உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும்  பங்களிப்பளிக்கும்  ஒன்றாகும்.

ஏராளமான மருத்துவ குணமிக்க இந்த நெல்லிக்கனி பழச்சாறு , கொழுப்புக்கள் கரைவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாகுவதற்கும் உதவுகின்றது. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் நமது உடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இவை உடல் வெப்பத்தை தணிக்கவும், இரத்தத்தை சுத்தமாகுவதற்கும், சரும அழகை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது .

இவ்வளவு மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள நெல்லிக்கனியில் எப்படி எளிய முறையில் பழச்சாறு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நெல்லிக்கனி - 6
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

முதலில் புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்
பின்பு இஞ்சியின் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்வதோடு , நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் .

வடிகட்டிய பழச்சாற்றை குளிரூட்டியில் வைத்து பரிமாறவும்.
இப்போது சத்தான நெல்லிக்கனி பழச்சாறு தயார் . இலகுவாக செய்யக்கூடியதும் ஏராளமான மருத்துவக் குணங்களை உடையதுமான நெல்லிக்கனி பழச்சாற்றை குடும்பத்துடன் பருகி மகிழுங்கள்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top