Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
பணத்தை கொட்டும் வங்கியைப் போல் ஜடேஜா செயல்படுகிறார்!

Sooriyan Gossip - பணத்தை கொட்டும் வங்கியைப் போல் ஜடேஜா செயல்படுகிறார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பேத்தியின் முகத்தை கூட பார்க்கவில்லை என்று இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திரா ஜடேஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இடையில் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்பது இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு ரிவாபா என்ற பெண்ணை திருமணம் செய்த ரவீந்திரா ஜடேஜா, அதன்பின் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறினார்.

இந்த நிலையில் ரவீந்திரா ஜடேஜா அவரின் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக அவரின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் - ஜடேஜாவை திருமணம் செய்த 3 மாதங்கள் அனைத்து சொத்துகளையும் தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார் ரிவாபா. இதன்பின் எங்கள் குடும்பத்திற்குள் சண்டை வந்தது. அதன்பின் அவருக்கும் எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. ஜடேஜாவை நாங்கள் எதற்காகவும் அழைக்க மாட்டோம். அவரும் எங்களை அழைக்க மாட்டார்.

நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது பேத்தியை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது.

மாமியார் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டார் ரவீந்திர ஜடேஜா. அவர்கள் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவார்கள். பணத்தை கொட்டும் வங்கியை போல் ஜடேஜா இருப்பதால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top