கடந்த வருடம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பேன் இந்தியா திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் நயன்தாரா, படுகோனே ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் வெளியாகி முதல் நாளிலே உலகம் முழுதும் 129 கோடி இந்திய ரூபாவை வசூலித்து சாதனை படைத்தது. அது மாத்திரமில்லாமல் உலகம் முழுதும் 17 நாட்களில் 1000 கோடி இந்திய ரூபா வசூலை எட்டி உலக சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நாயகிகளில் ஒருவரான நயன்தாரா சர்வதேச அளவிலான ஒரு விருதைப் பெற்றிருக்கிறார்.
அதாவது 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதன்போது நடிகை நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை நடிகர் ஷாருக்கான் அவருக்கு வழங்கி வைத்தார். நயன்தாரா இந்த விருதோடு இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.