Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
07
உடலுக்கு குளிர்ச்சி தரும் பசளிக்கீரை...!

SooriyanFM Gossip - உடலுக்கு குளிர்ச்சி தரும் பசளிக்கீரை...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

267 Views
நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசளிக்கீரை.
இதில் கொடி பசளை, குத்துப்பசளை, தரைப்பசளை, வெள்ளைப்பசளை என பலவகைகள் உண்டு.
இந்த பசளிக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசளிக்கீரை இருக்கிறது.

இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவாகும். நோய்களையும் உடல் கோளாறுகளையும் தணிக்கும் உணவு மருந்தாக செயல்படுகின்ற பசளிக்கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பசளிக்கீரையில் விற்றமின் C,விற்றமின் A ,மற்றும் E போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக்கோளாறு, சிறுநீரகத்தொற்று போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

மலச்சிக்கல்,நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கு இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாக விளங்குகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால்,பசளிக்கீரையை பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் செரிமான மண்டலம் சீராக செயல்படும். அதுமட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் சீராகும்.

இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.பசளிக்கீரையும் உடல் கழிவுகளை வெளியேற்றி வயிற்றுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றவும் உதவி செய்கிறது.

பசளிக்கீரை தாகம் தணிக்கும் வல்லமை கொண்டவை. கோடைக்கால நோயான சூட்டு கொப்புளங்கள், வியர்க்குரு பிரச்சினைகளுக்கு பசளிக்கீரை நல்ல தீர்வாக இருக்கும்.

வெப்ப காலத்தில் குளிர்மை தரக்கூடிய பசளிக்கீரையை வாரத்திற்கு இரண்டு முறையேனும் உட்கொண்டு இதனால் கிடைக்கும் விற்றமின்களை பெற்று,ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top