விட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழம் கடைகளில் உலர்ந்த பழங்களாக கிடைக்கின்றன.எனவே பெரும்பாலான மக்கள் அவற்றை உலர்பழங்களாக சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
உடலுக்கு ஊட்டச்சத்து தரும் அத்திப்பழத்தை ஊறவைத்து காலையில் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
காலையில் அத்திப்பழங்களை ஊறவைத்து சாப்பிடுவது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்திப்பழத்தில் கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளமையால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது.
அத்திப்பழத்தை சாப்பிடுவதால்,நாள் முழுவதும் உங்கள் பசியை கட்டுப்படுத்துவதுடன். இதன் மூலம் எடை அதிகரிப்பதையும் தடுக்க முடியும்.
இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது: நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் அல்லது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், ஊறவைத்த அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.
அத்திப்பழம் வலுவான எலும்புகளைத் தருகிறது.நிறைய பெண்கள் கல்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.கல்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் காட்டாயம் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.
எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது அத்திப்பழத்தை உட்கொண்டு, இதனால் கிடைக்கும் நன்மைகளை பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.