தெற்காசியாவின் அதிவேக வீரராகத் திகழும் இலங்கையின் யுப்புன் அபேகோன், உலகளவில் பிரபல்யமான ஒரு தடகள வீரராக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற 2024 மெய்வல்லுநர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுப்புன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிகாண் போட்டியை யுப்புன் அபேகோன் 10.15 செக்கன்களில் ஓடி முடித்து முதலாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவுசெய்து அவர் முதலாம் இடத்தைப் பிடித்தார்.
ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கு உலக மெய்வல்லுநர்களுக்கு சர்வதேச மெய்வல்லுநர் சங்கம் ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதற்குள் இடம்பெறவுள்ள சர்வதேச 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் யுப்புன் சிறந்த நேரப் பெறுதிகளுடன் வெற்றி பெற்றால், தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியை பெறுவதற்கு குறைந்தளவான வாய்ப்புகளே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.