தலைப் பகுதியில் இருக்கும் இரத்த நாளங்களில், இரத்த ஓட்டம் சீரற்றுக் காணப்படுவதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகின்றது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால், ஒருபோதும் நமக்குத் தலைவலி ஏற்படாது.
பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
மடிக்கணினி, கைத்தொலைபேசி என, பல இலத்திரனியல் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதிப்படைய வாய்ப்பதிகம்.இதனால் கூட அதிகமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலியிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
மூன்று நாட்களுக்கு மேல் தலைவலி தொடர்ந்திருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களும் தலைவலி ஏற்பட ஒரு விதத்தில் காரணமாக இருக்கின்றன.அதனால் முறையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள்.
தலைவலி ஏற்படாமல் தடுக்க,தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, இரவில் கட்டாயமாக எட்டு மணி நேரம் முறையான தூக்கத்தையும் கடைபிடியுங்கள்.
தலைவலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய நோய் அல்ல. உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் மிக அவசியம். ஆகவே மேற்கூறியவற்றை பின்பற்றி தலைவலியிலிருந்து தீர்வினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.