Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
இதுவே எனது இறுதித் தொடர் - ராகுல் டிராவிட்!

Sooriyan Gossip - இதுவே எனது இறுதித் தொடர் - ராகுல் டிராவிட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதனால் இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளருக்கான தேடலில் bcci களமிறங்கியுள்ளதுடன், பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பங்களையும் வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடந்த மாதம் கடைசி வாரம் வரை கால அவகாசம் கொடுத்திருந்தனர்.

அதேசமயம் ராகுல் டிராவிட் தனது பதவியில் நீடிக்க விரும்பினால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரானது, தான் பணியாற்றும் கடைசித் தொடர் என்றும், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு, தான் மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் - ‘நான் இந்தியாவுக்கு பயிற்சி அளித்த ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது. என்னைப் பொறுத்தவரை, இது வேறுபட்டதல்ல, ஏனென்றால் நான் பொறுப்பேற்ற கடைசி தொடராக இது இருக்கும். நான் இந்திய அணிக்கு பயிற்சியளிப்பதை மிகவும் இரசித்தேன். இந்தக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே ஒரு சிறப்பான பணியாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக, வாழ்க்கையில் நான் என்னைப் பார்க்கும் நிலையைப் பார்த்தால், என்னால் மீண்டும் விண்ணப்பிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. எனவே, இதுவே எனது இறுதித் தொடராக இருக்கும். நான் இப்பதவியை ஏற்ற முதல் நாளிலிருந்தே, ஒவ்வொரு போட்டியையும் முக்கியமானதாக நினைத்ததைப் போலவே தற்போதும் அது மாறாமல் இருப்பதாக உணர்கிறேன்’ என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top