தொடருந்து புறப்பட்டு சில நொடிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, திருடர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
தொடருந்தில் பயணிக்கும் போது ஜன்னல் அருகே அமர்ந்து செல்லும் அதிகமான பயணிகள், கைகளை வெளியே வைத்துச் செல்லும் அதேவேளை, தமது கையடக்கத் தொலைபேசிகளையும் பயன்படுத்தியவாறே செல்கின்றனர்.
இவ்வாறான நிலையில் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற தொடருந்து ஒன்றில் இருந்து, சிறுவன் ஒருவன், பயணி ஒருவரின் தொலைபேசி ஒன்றினைப் பறித்துச் சென்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அவை தற்போது வைரலாகி வருகின்றன.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவரின் கையில் இருந்த தொலைபேசி ஒன்றினையே இவ்வாறு குறித்த சிறுவன் பறித்துச் சென்றுள்ளான்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் பிரபலமான தொடருந்து நிலையம் ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் பொதுப் போக்குவரத்தினைப் பயன்படுத்தும் பிரயாணிகள் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.