அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்துபோன தனது பாட்டியின் உடலை எரித்த சாம்பலை உட்கொண்டுள்ளதுடன், அதனைத் தனது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணவில் கலந்து வழங்கியதாக கூறியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
குறித்த பெண்ணின் பாட்டி கடந்த வருடம் இறந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கினை மேற்கொண்ட அவரது குடும்பத்தினர் பாட்டியின் உடலைத் தகனம் செய்துள்ளனர். அதன் பின்னர் கிடைத்த சாம்பல் மற்றும் ஏனைய மிச்சங்களை ஒரு பாத்திரத்தில் சேமித்து அவர்களின் வீட்டிலேயே வைத்திருந்துள்ளனர்.
பாட்டியின் இறப்பை நினைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் மனம் வருந்திக்கொண்டிருந்த நிலையில், அவர்களது மனநிலையை மாற்றி அவர்களை ஆறுதல்படுத்துவதற்காக வீட்டில் இருந்த பாட்டியின் சாம்பலை அவரது தாய் மற்றும் குடும்பத்தினருக்கு உணவில் கலந்து வழங்கியதாக குறித்த பெண் கூறியுள்ளார்.
மேலும், தான் வேண்டுமென்றே தனது பாட்டியின் சாம்பலை உட்கொண்டதாகவும் குடும்பத்தினருக்கு வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.