நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்பட அப்டேட் மற்றும் இத்திரைப்படங்களைப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
'விடாமுயற்சி' திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் விரைவில் நிறைவு செய்யவிருப்பதாகவும், இந்த ஆண்டு தீபாவளிக்கு 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகும் என்றும்,படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில்,நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் 'இந்தியன் 2', ராம்சரணின் 'கேம் சேஞ்சர்' திரைப்படங்களை முடித்த ஷங்கர், அடுத்ததாக 'வேள்பாரி' திரைப்படத்தை இயக்கப்போகின்றார்.
இத்திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றது.
தளபதி விஜயை வைத்து ஷங்கர் 'நண்பன்' திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில், தல அஜித்துடன் இதுவரை இணைந்து அவர் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.