Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
12
பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி மோதலா ? பயிற்சியாளர் விளக்கம் !

Sooriyan Gossip - பாபர் அசாம் மற்றும் ஷஹீன் அப்ரிடி மோதலா ? பயிற்சியாளர் விளக்கம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

751 Views
பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில், அந்த அணியின் பயிற்சியாளர் அசார் மஹ்மூத் பதில் வழங்கியுள்ளார்.

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் SUPER8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறுமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான தோல்வியே இதற்கான காரணமாகும்.அமெரிக்க அணி அடுத்த 2 போட்டிகளில் தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் தலைமைத்துவம் மாற்றப்பட்டதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தற்போதைய தலைவர் பாபர் அசாம் மற்றும் முன்னாள் தலைவர் ஷஹீன் அப்ரிடி ஆகியோருக்கிடையில் தொடர்ச்சியான முறையில் மோதல் ஏற்படுவதாகவும் இருவருக்குமிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் ஜாம்பவான் வசிம் அக்ரம், நேரடியாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த விடயம் தற்போது சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் துணைப் பயிற்சியாளர் அசாம் மஹ்மூத் வசிம் அக்ரம் அப்படிச் சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணியில், அப்படி ஏதும் பிரச்சினைகள் இல்லை.

பாபர் மற்றும் அப்ரிடி இருவரும் நல்ல நண்பர்கள், அவர்களுக்கு இடையிலான உரையாடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் இருவருமே பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தான். கடந்த 2 போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு எந்தவொரு தனிப்பட்ட வீரரும் காரணமல்ல. அது ஒட்டுமொத்தமாக அணி மற்றும் நிர்வாகத்தின் தவறு தான்.

“நாங்கள் எந்த வீரரையும் மறைக்கவோ, கட்டுப்படுத்தவோ இல்லை. பாகிஸ்தான் அணியில் எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது. ஒரு அணியாக வெற்றிபெறுவது எங்களின் பொறுப்பு மட்டுமல்ல, எங்களின் கடமையும் கூட” என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top