மிகப்பெரிய மெகா ஹிட்டான இந்தப் பாகுபலி திரைப்படம் வெளிவந்த போது,இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனுஷ்காவும்,நடிகர் பிரபாஸும் உண்மையிலே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் இரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
பல கொண்டாட்டங்கள் ,இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றில் இவர்கள் இருவரும் அருகருகே அமர்வதைப்பார்த்து ,இவர்களுடைய இரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என்று மகிழ்ச்சி வெள்ளத்தில், இவர்களுடைய உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.
ஆனால்,இது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் நடிகை அனுஷ்காவோ அல்லது பிரபாஸோ வெளியிடவில்லை.
அண்மையில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர் பிரபாஸ் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் இதுதான் என்று சொல்லிய விடயம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
அதாவது ,இயக்குநர் ராஜமௌலி விளையாட்டாக "பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் ,பிரபாஸ் உண்மையிலேயே சோம்பேறிக்குணம் கொண்டவர்.திருமணம் செய்வதற்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவருடைய பெற்றோருக்கு அவர் அறிமுகப்படுத்துவதே அவருக்கு மிகப்பெரிய வேலையாக இருக்கும்.அதனால் தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார் என கூறியிருக்கின்றார் .
இந்த விடயம் தற்போது இரசிகர்கள் மத்தியில் வைரலாகி ,உண்மையிலே ராஜமௌலி விளையாட்டாகத்தான் பேசினாரா? அல்லது இதுதான் உண்மையா என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார்கள்.