மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி ஹேலி மெத்யூஸ் 38 ஓட்டங்களையும் ஸ்டஃபானி டெய்லர் 33 ஓட்டங்களையும் ஷெமெய்ன் கெம்பெல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
சுகந்திகா குமாரி 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கவிஷா டில்ஹாரி 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 34.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, விஷ்மி குணவர்தன ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
விஷ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும் சமரி 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஹசினி பெரேரா 43 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர், ஹர்ஷிதா சமரவிக்ரவும் நிலக்ஷிகா சில்வாவும் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த ஆட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி இடமென்றவுள்ளது.