எமது உடல் ஆரோக்கியத்தை பலமாக்கிக் கொள்வதற்கு பழங்கள் பெரும் பங்காற்றுகின்றன. பழங்களை அதிகளவில் உட்கொள்வதனால் தீராத பல நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தகைய மகத்தான மருத்துவ குணங்களைக் கொண்ட பழங்களில் வில்வம் பழமும் ஒன்றாகும். எனவே வில்வம் பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
சிலருக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகக்கூடும். அவ்வாறானவர்கள் வில்வம் பழத்தோடு பனங்கற்கண்டையும் சேர்த்து பானமாக அருந்தி வந்தால் வயிற்றுப் பிரச்சினை விரைவாகத் தீரும்.
வில்வம் பழம், வில்வ இலை, சிறிதளவு மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் ,தண்ணீரையும் கலந்து வாரம் இருமுறை அருந்தினால் ஆஸ்துமா நோய் குணமாவதோடு இருமல்,சளி போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
கோடைக் காலங்களில் வில்வம் பழத்தை உட்கொள்வதனால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு உடல் குளிர்ச்சியாகக் காணப்படும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வாரம் இருமுறை வில்வம் பழத்தை உண்ணலாம். இதனால் உடல் எடை சீராகக் காணப்படும்.
எனவே மருத்துவ பலன்களை அள்ளித்தரும் இந்த வில்வம் பழத்தை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தினை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.