T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இந்தப் போட்டியில் மோதவுள்ளன.
பிரிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமாயின், 13 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணி வெற்றி பெற்ற முதலாவது உலகக் கிண்ணமாக இது அமையும்.
அதேநேரம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுமாயின், அது தென்னாபிரிக்க அணியின் முதலாவது உலகக் கிண்ண வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.