'வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, 90 களின் காலகட்டத்தில் பல திரைப்படங்களில் நடித்து,இரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்து, முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
நீண்ட இடைவேளைக்குப் பின்பு நடிகர் பிரசாந்த் 'அந்தகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் சிம்ரன், வனிதா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி என பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் இயக்கி கைவிட்ட நிலையில், இறுதியாக நடிகர் பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் அவர்களே இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தை ஓகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் `அந்தாதூன்' என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.