இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நகரொன்றின் வீதிகளில் உலாவரும் இராட்சத முதலையின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
குறித்த நகருக்கருகில் காணப்படும் நதியில் 3 வகையான முதலைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக அந்த நகரில் காணப்படும் வீதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.
இரவு நேரத்தில் நதிகளை விட்டு வெளியில் வரும் முதலைகள் வீதிகளில் உலாவரும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், பொதுமக்கள் பலரும் இது தொடர்பில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அருகிலுள்ள காவல்நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் முறைப்பாடளித்த போதிலும் உரிய நடவடிக்கைகளை எவரும் முன்னெடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.