இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்பகுதி ஒன்றில் காணப்படும் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் 2 அரச பாடசாலைகள் காணப்படுகின்றன. இந்தப் பாடசாலைகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அந்தப் பாடசாலைகளை மூடுவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், அந்தப் பாடசாலைகள் தற்போது வரையிலும் இயங்கி வருகின்றன. ஆரம்பப் பிரிவில் உள்ள 6 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், உயர்தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களும் காணப்படுகின்றனர். இவர்களுக்கு வருடமொன்றிற்கு சுமார் 60 தொடக்கம் 70 இலட்சம் இந்திய ரூபாய்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றது.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் தற்போதைய விதிகளின்படி, 20ற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் மூடப்பட்டு அதில் கல்வி கற்கும் மாணவர்கள் அருகில் இருக்கும் பாடசாலைகளுக்கு மாற்றப்படுகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அனைவரும் தங்களது பாராட்டுக்களை இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து வருகின்றனர்