‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்துள்ள திரைப்படம் ‘ஏழு கடல், ஏழு மலை’.
இத்திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். அத்துடன், நடிகர் சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் ‘ஏழு கடல், ஏழு மலை’ திரைப்படத்தின் முதலாவது பாடலான 'மறுபடி நீ' பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், சந்தோஷ் நாராயணன் பாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்தப் பாடல் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.