Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
கையால் சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா?

SooriyanFM Gossip - கையால் சாப்பிடுவதினால் இவ்வளவு நன்மைகளா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

465 Views
நம்மில் பலர் வீட்டிலேயே கரண்டியினால் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கின்றோம்.இதனை நாம் நாகரிகம் என்று நினைத்துக் கொள்கின்றோம்.

ஆனால் உணவினை கையால் சாப்பிடுவதில் இருக்கும் திருப்தி நாம் கரண்டியினால் சாப்பிடுகின்ற பொழுது கிடைப்பதில்லை.ஆகவே நாம் கையால் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என இந்தப் பதிவில் பார்ப்போம்.

 
உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கின்றதா? குளிர்ச்சியாக இருக்கின்றதா? திட நிலையில் இருக்கின்றதா? திரவ நிலையில் இருக்கின்றதா? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்.
அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகின்றது.பின்னர் நாம் சாப்பிடப் போகின்றோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது.


அதன்பின்னர் வயிறு,செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வைச் செய்வதற்கு தொடங்கிவிடுகின்றது.
மேலும், நமது கையில் நன்மை செய்யும் பக்டீரியாக்களும் உள்ளன.அவை எமது வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்து செரிமானத்தை எளிதாக்குகின்றது.


ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும் போதுதான் இந்தப் பலன் கிடைக்கும்.கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.

கைக்கு பதிலாக கரண்டியினால் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்கத் தாமதமாகும்.அது மட்டுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை கரண்டியினால் எடுத்து வாயில் வைத்தால் நாக்கைச் சுட்டுக்கொள்ள நேரிடலாம்.

கரண்டியினால் சாப்பிடும் பொழுது, நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகின்றோம் என்பதில்தான் இருக்கிறது.அதனால் எமக்கு ஒரு விதமான இயந்திரத்தன்மை வந்துவிடுகிறது.இதனால் உணவை இரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை.
ஆகவே கையால் சாப்பிடும்பொழுது கரண்டியினால் சாப்பிடுவதைவிட அதிக திருப்தி கிடைக்கின்றது.

கரண்டியால் சாப்பிடுபவர்கள் மிக வேகமாக சாப்பிடுவதோடு,அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள்.
இதனால் பாதிப்பு அதிகமாக ஏற்படும்.ஆனால் கையால் சாப்பிடும் பொழுது அவ்வளவு வேகமாகச் சாப்பிட முடியாது என்பதால் பாதிப்புகள் குறையும்.

நாம் சாப்பிடும் பொழுது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள் மட்டுமல்லாமல் பழமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின் மூலம் நோயைக் குணப்படுத்தும் முறையை குறிக்கிறது.

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கின்றது.இது உணவில் உள்ள கெட்ட சக்திகளை விரட்டுவதாக நம்பப்படுகின்றது.இந்தப் பலன்கள் நாம் கரண்டியினால் சாப்பிடும்போது கிடைப்பதில்லை.

ஆகவே கையினால் சாப்பிடும்போது நமக்கு வயிறு மட்டுமின்றி, மனமும் நிறைகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top