2024 பிரான்சின் தலைநகர் பரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.
இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார்.
இதன்படி, பரிஸில் இடம்பெறும் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்த இதுவரை இலங்கை வீரர்கள் ஆறு பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.