மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தொலைந்து போனால் அவற்றைத் தேடி, உரிய நபர்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதே அந்தத் தொழிலாகும்.
இந்தப் புதிய தொழில்முயற்சி தொடர்பில், 'South China Morning Post' என்ற சீன நாட்டு வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது தொழில் தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்துவதுடன், அதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 4,200 அமெரிக்க டொலர் வரை கட்டணமாகவும் அறவிடுகின்றனர்.
இதற்காகப் புதிய பணியாட்கள் தேவை என்றும் சில நிறுவனங்கள் விளம்பரம் செய்துள்ளதுடன், அதற்காக அவர்கள் சிறந்த உடற்கட்டமைப்பு, சிறந்த கண்பார்வை மற்றும் பகுத்தறிவு போன்ற தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்தப் புதிய தொழில் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.