நாசாவின் இலட்சிய க்ரூ ஹெல்த் அண்ட் பெர்ஃபொர்மென்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் அனலொக் (CHAPEA) பணியானது, ஹூஸ்டனில் உள்ள ஜோன்சன் ஸ்பேஸ் சென்டரில் உள்ள 1,700 சதுர அடியில் 3D- இல் அச்சிடப்பட்ட செவ்வாய் கிரகத்தில் பயிற்சிப் பணியில் சிலர் இருந்தனர்.
நாசா நான்கு பேரை செயற்கை செவ்வாய்க்கு ஒரு வருட கால பயணத்திற்கு அனுப்பியது. அவர்கள் 1 வருட பயணத்தை வெற்றிகரமாக முடித்து வெளியேறினர். அவர்கள் அங்கு வாழ்ந்த காலத்தில், விவசாயம் செய்வது, உணவு தயாரித்தல், உடற்பயிற்சி, பராமரிப்புப் பணிகள் மற்றும் அறிவியல் சோதனைகள் போன்ற பல செயல்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் இலட்சியத் திட்டத்திற்கு தயாராகும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. இது ரெட் பிளானட்டிற்கான நீண்ட கால பயணங்களின் போது, விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளக்கூடிய உடல் மற்றும் உளவியல் சவால்கள் குறித்த முக்கியமான தரவுகளை வழங்குகிறது.
செவ்வாய் கிரகத்தைப் போல அப்படியே உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம், மனித ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதனையே முதன்மைக் குறிக்கோளாக நாசா கொண்டுள்ளது.
378 நாட்கள் அவர்கள் அங்கு தங்கியிருந்தபோது, பல சவால்களை எதிர்கொண்டதாக கூறினர். "மார்ஸ்வாக்ஸ்", பூமியுடனான தொடர்பு தாமதங்கள், உபகரணங்கள் தோல்விகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் ஆகியவை இதில் சோதனை செய்யப்பட்டது என்று நாசா கூறியுள்ளது.