கண்ணும் கண்ணும் பார்த்து, பேசி பழகினால் தான் காதல் வரும் என்று இருந்த காலத்தில் பார்க்காமலேயே காதல் என்ற கதைதான் இந்தத் திரைப்படம்.அகத்தியன் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு அஜித் மற்றும் தேவயானி நடித்து வெளியான இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
காதல் இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்கிற அளவில் காதலைப் பற்றி ஏராளமான படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன.அந்தவகையில் பார்க்காமலே கடிதம் வழியே காதல் என்கிற புதுமையான கதையமைப்பில் ஒவ்வொரு காட்சியும்,வசனமும் இரசிக்கும் விதமாக அமைந்த காதல் கோட்டை திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை என மூன்று தேசிய விருதுகள் கிடைத்ததுடன் பிலிம்பேர்,தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது இந்தத் திரைப்படம்.
தமிழில் இயக்குநருக்கு தேசிய விருது கிடைத்த முதல் திரைப்படமும் இதுதான்.அந்தவகையில் காதல் திரைப்படங்களில் என்றும் சிறந்த காதல் திரைப்படமாக இருக்கிறது.
இந்நிலையில் காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.